ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலையில் மின் விளக்குகள் பொருத்தி சோதனை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ராயக்கோட்டை, அக்.2: ஓசூர்- தர்மபுரி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ராயக்கோட்டை வழியாக நடைபெறும் இப்பணியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தவிர இதர வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே அணுகு சாலை பணிகள் முடிந்து, வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. கிராமங்களை இணைக்கும் பகுதியில் உயர்மட்ட மின் கம்பங்கள் அமைத்து அதில் பல்புகளை பொறுத்தி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை எரியவிட்டு சோதனை மேற்கொண்டனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள புதிய சாலையில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளால் கிராம பகுதிகள் நகரங்களை போல காட்சியளிக்கிறது. இவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை