ஓசூர் அருகே சானமாவு பகுதியில் 3 யானைகள் முகாம் : விவசாயிகளுக்கு எச்சரிக்கை

ஓசூர் :  ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், 3 யானைகள் சுற்றி வருவதால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக 3 ஒற்றை யானைகள் தனித்தனியாக சுற்றி வருகின்றன. அடிக்கடி யானைகள் கிராமப் பகுதிகளுக்கு வந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால் டி.கொத்தப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, சானமாவு, அம்பலட்டி, நாயக்கனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வேட்டை தடுப்பு பிரிவினர், வனத்துறையினர் 15 பேர் இணைந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை, மாலை நேரங்களில் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இரவு நேரங்களில் விவசாயிகள் தோட்டத்திற்கு காவலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வனப்பகுதிக்கு விறகு பொறுக்கவும், ஆடு, மாடுகளை மேய்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்,’ என்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்