ஒற்றுமை யாத்திரை சரித்திர வெற்றி பெறும் சச்சின் பைலட் தகவல்

புதுடெல்லி: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது.கட்சி ேமலிடம் தலையிட்டு இருவருக்கு இடையே சமரசம் செய்து வைத்துள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி எம்பி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் நேற்று மாலை ராஜஸ்தானில் உள்ள ஜலாவாரில் நுழைந்தது. இந்நிலையில், சச்சின் பைலட் நேற்று காலை கூறும்போது,‘‘  ராஜஸ்தானில் ஒற்றுமை யாத்திரை வெற்றி அடைவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். அதை விட அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைப்பதே முக்கிய குறிக்கோள்.ராஜஸ்தானில் ஒவ்வொரு 5 ஆண்டும் ஆட்சி மாறும்.அந்த நடைமுறையை மாற்ற காங்கிரசார் ஒற்றுமையுடன் வேலை செய்கின்றனர். ஒற்றுமை யாத்திரை மாநிலத்தில் சரித்திர வெற்றி அடையும்’’ என்றார்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை