ஒரே இரவில் நடக்கும் கதை

சென்னை: ‘பக்ரீத்’ படத்தை தொடர்ந்து ஜெகதீசன் சுபு எழுதி இயக்கும் படம், ‘இரவு’. இதை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். வெற்றி, ஷிவானி நாராயணன், மன்சூர் அலிகான், சந்தானபாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி நடிக்கின்றனர். வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் ஹீரோ வாழ்க்கையில், அவன் கற்பனையில் உருவாக்கியிருந்த சில கதாபாத்திரங்கள் திடீரென்று நேரில் தோன்றுகிறது. இதையடுத்து ஒரே இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகிறது. பாபு தமிழ் வசனம் எழுத, ஸ்ரீனிவாஸ் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார். அரோல் கரோலி இசையில் ஞானகரவேல், கருணாகரன், கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதுகின்றனர்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்