‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை அடிப்பேன்’ மேடையில் செருப்பை காட்டி நடிகர் பவன்கல்யாண் ஆவேசம்

திருமலை: ஆந்திராவுக்கு 3 தலைநகரம் அமைக்க வலியுறுத்தி, ‘வட ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழு’வினர், சில நாட்களுக்கு முன்பு, ‘விசாக கர்ஜனை என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர்அமைச்சர் ரோஜா உள்ளிட்டோரின் வாகனங்களை தாக்கினர். இதில், ரோஜாவின் உதவியாளர், போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, பாஜவின் ‘பி டீம்’மாக செயல்படும் நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை பாஜ.விடம் பணம் வாங்கி நடத்தி வருவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அமராவதி அருகே தனது கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியினர் இடையே நேற்று பேசிய பவன் கல்யாண், திடீரென காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி உயர்த்தி காட்டி, ‘மற்ற கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு கட்சி நடத்துகிறேன் என என்னை சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குண்டர்களே எனது பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள்,’ என ஆவேசமாக பேசினார். …

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பெங்களூருக்கு மாற்றம்

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!