ஒன்றிய அரசை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காஸ் விலை உயர்வை கண்டித்தும், காஸ் விலை மானியத்தை குறைக்க கோரியும், ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதியாத கார்டுகளுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாதர் சங்க தலைவர் ரமா கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பத்மா, வட்ட குழு உறுப்பினர்கள் ஆஷா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு கொடுத்தனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு