ஒன்றிய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை, செப்.15: தொலை தொடர்பு ஊழியர்களின் சேமிப்பு பணத்தை ரூ.250 கோடிக்கு மேல் ஊழல் செய்த பிஎஸ்என்எல் சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் ஊழியர் சங்க கிளை சார்பில் மாட்டுச்சந்தை ரோடு தொலைபேசியகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பட்டுக்கோட்டை கிளை தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். சிவசிதம்பரம் கோஷங்களை எழுப்பினார். கிளை செயலாளர் மரியபிரான்சிஸ் ஜெயசீலன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரன், சிவசங்கரன், செல்வகுமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் விஜயராகவன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை