ஒட்டன்சத்திரம் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி

ஒட்டன்சத்திரம், மே 9: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த இறுதியாண்டு மாணவிகளுக்கு சுயதொழில் முனைவோர் பயிற்சி முகாமை நடத்தியது. கல்லூரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். முகாமில் சுயதொழில்கள் குறித்தும், அரசின் கடனுதவிகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்து கூறினர். இதில் கல்லூரியின் முதல்வர் தேன்மொழி, ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி, தமிழ் துறை தலைவர் முருகேஸ்வரி, பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், அர்ச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் செல்வமணி நன்றி கூறினார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்