வலங்கைமான், அக். 8: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் பைரவர்ருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சியை கோயில் அர்ச்சகர் ராஜகுரு, ஜெகன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், வலங்கைமான் பாய்க்காரத் தெருவில் உள்ள தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரர் கோயிலில் பைரவர் ஹோமம் , கடம் புறப்பாடு, கலசாபிஷேகம்,சிறப்பு அபிஷேகம், மகா தீபாதாரணையும் நடைபெற்று, சிறப்பு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு குழு உறுப்பினர்கள், பக்தர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.