ஏரி மதகு சீரமைப்பு தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, ஜூன் 25: தண்டராம்பட்டு அருகே ஏரி மதகு சீரமைக்கப்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குங்கிலிநத்தம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை மூலம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. ஏரி மதகு அடிப்பகுதியில் உடைத்து தண்ணீர் வீணாக வெளியே சென்று கொண்டிருப்பதாக தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதன் எரொலியாக நேற்று தென்முடியனுர் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வரத்து கால்வாய் பராமரிப்பு உதவியாளர்கள் ஏரியிலிருந்து மதகு வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரை மணல் மூட்டை கொண்டு அடுக்கி சரி செய்தனர். இதனால், மதகு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி