ஏரியில் கிடந்த பைக்குகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று பாக்குப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பாக்குப்பேட்டை ஏரிக்கரை அருகே அவர்கள் சென்றபோது அங்கு ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை கண்டனர்.இதையடுத்து, அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த 8 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி மணவாளநகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த எண்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்