ஏரல், ஜூலை 20: ஏரல் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ் ஏரல் பேரூராட்சியில் வருகை தந்து ₹1 கோடி 14 லட்சத்தில் நடைபெற்று வரும் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டிடம் பணி மற்றும் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் பணி, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி உட்பட வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்நிகழ்ச்சியின் போது ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் ஏரல் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.