ஏரலில் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கல்

ஏரல், பிப்.14: ஏரலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாக தையல் மிஷின் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏரல் அன்னை விஜிஎஸ் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அறக்கட்டளையின் நிறுவனர் அன்னை விஜி சரவணன், கணவரை இழந்தோர், மழை வெள்ளத்தால் தையல் மிஷின்களை இழந்து பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வழங்கினார். இதில் அறக்கட்டளை உறுப்பினர்கள் கிங்ஸ்டன் ஜெபக்குமார், பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி