ஏபிடிஓ.,க்கள் இடமாற்றம்

 

மல்லசமுத்திரம், செப்.10: நாமக்கல் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். கபிலர்மலை வட்டாரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் சங்கீதா, திருச்செங்கோடு வட்டாரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மல்லசமுத்திரத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் கன்னியம்மாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பள்ளிபாளையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு, பணிபுரிந்த வெங்கடாஜலபதி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராாக மல்லசமுத்திற்கும், பரமத்தி வட்டார மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரியும் பழனியம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு பிரிவிற்கும், பரமத்தி வட்டாரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் இளங்கோவன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக அதே இடத்தில் மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கிணற்றில் தவறி விழுந்த நர்ஸ் பலி

பனை விதைகள் நடும் பணி

1550 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது