மதுரை: மதுரை, காமராஜர் சாலை குருவிக்காரன் சந்திப்பு அருகில் அரசு வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில், இந்த மையத்தில் நுழைந்த மர்ம நபர், ஏடிஎம் இயந்திரத்தின் லாக்கரை உடைத்து, உள்ளே இருந்த பணத்தை திருட முயன்றார். எச்சரிக்கை மணி ஒலிக்கவே தலைமை அலுவலகத்தில் இருந்து, காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக போலீசாரும் வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டிருந்தது. தெப்பக்குளம் அருகே பதுங்கியிருந்த கொள்ளையன் யாசின் அலி (25) என்பவரை கைது செய்தனர்….