எஸ்.பி அலுவலக ஊழியரிடம் வழிப்பறி

ஆவடி: பட்டாபிராம் கந்தசாமி 3வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(50). இவர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் லோகநாதன் திருவள்ளூரில் ஒரு திருமணத்திற்கு பைக்கில் சென்று விட்டு வரும் வழியில் வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி சாலை, கருணாகரச்சேரி சுரங்கப்பாதை அருகில் பைக்கை நிறுத்தி இயற்கை உபாதை கழித்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் லோகநாதனை மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர். புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்….

Related posts

ஓசூர் அடுத்த சாத்தனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது