நாகர்கோவில், ஜன. 18: குமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறைதீர் முகாம் நடை பெற்று வருகிறது. அதன்படி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் எஸ்.பி. சுந்தரவதனம் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்றார். ஏற்கனவே பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது போலீஸ் சரகம் வாரியாக இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் விசாரணை மேற்கொண்டனர். நேற்று நடந்த முகாமில் மொத்தம் 80 மனுக்கள் வந்தன. இந்த மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டன.