Sunday, September 22, 2024
Home » எஸ்பி அலுவலகத்தில் காதல் தம்பதி தஞ்சம் பள்ளிகொண்டாவை சேர்ந்தவர்கள்

எஸ்பி அலுவலகத்தில் காதல் தம்பதி தஞ்சம் பள்ளிகொண்டாவை சேர்ந்தவர்கள்

by Karthik Yash

வேலூர், ஆக.17: காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். பள்ளிகொண்டாவை சேர்ந்தவர்கள் மதன்(25), பிரீத்தா(23). மதன் வேலூரில் பைக் ஷோரூம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பிரீத்தா படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் மதனும், பிரீத்தாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பிரீத்தாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் தங்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

மேலும் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியதாக தெரிகிறது. இதையடுத்து பிரீத்தாவும், மதனும் கடந்த 6ம் தேதி பெற்றோர்களுக்கு தெரியாமல் வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையில் தங்களை பெற்றோர் தேடுவதை அறிந்து மதனும், பிரீத்தாவும் காதல் தம்பதிகளாக நேற்று மதியம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டு மனு அளித்தனர். இம்மனுவை பள்ளிகொண்டா போலீசாருக்கு அனுப்பி வைத்த போலீசார் இருவரையும் அங்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

eighteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi