எல்லையில் பாக். துப்பாக்கிசூடு

ஜம்மு: சர்வதேச எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஜம்மு மாவட்டம் அர்னியாவில் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதலில் இந்திய வீரர்கள் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் புதுப்பிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன. எனினும் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது