எரிமலையில் மலையேற்றம் ரஷ்யாவில் 8 பேர் பலி

மாஸ்கோ:  எரிமலையில் மலையேற்றத்தின் மீது தவறிவிழுந்து உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் காம்சாட்கா தீபகற்பத்தில் குளுசெவ்ஸ்கயா சோப்கா என்ற எரிமலை அமைந்துள்ளது. 4750 மீட்டர் உயரம் கொண்ட இந்த  மலை சிகரம் மலையேற்ற வீரர்களிடையே பிரபலமானது. இந்நிலையில் 2 வழிகாட்டிகளுடன் 10 மலையேற்ற வீரர்கள் கடந்த வாரம் மலையேற்ற பயிற்சியை தொடங்கியுள்ளனர். கடந்த சனியன்று மலைஉச்சிக்கு 500 அடி கீழே சென்றபோது மோசமான வானிலையால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்போது வீரர்கள் தவறி விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மலையேற்ற வீரர்கள் எண்ணிக்கை நேற்று 8 ஆக அதிகரித்தது. விபத்தில் இருந்து தப்பிய 4  பேரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 பேரையும் மீட்பதற்காக ஹெலிகாப்டரில் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்….

Related posts

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்