எரணம்பட்டியில் தடுப்புச்சுவர் இல்லாத கிணறு

சின்னமனூர் : சின்னமனூர் அருகே சங்கராபுரத்திலிருந்து கோணம்பட்டி வழியாக எரணம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோணாம்பட்டியிலிருந்து எரணம்பட்டி சாலையின் இருபுறங்களிலும் விவசாயம் ெதாடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சாலையில் ஒரு தோட்டத்தில் உள்ள கிணறு சாலையோத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் இவ்வழியே சாலையை கடக்கும் வாகனங்கள் கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அதிவேகமாக செல்லும் டூவீலர்களிடையே நாய் குறுக்கே வந்தால் அந்த வாகனம் கிணற்றுக்குள் பாயும் அபாயமும் உள்ளது.எனவே, எரணம்பட்டி கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என ஓட்டுநர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை