எடப்பாடி பழனிசாமி சென்னை சென்றார்

சேலம், ஜூலை 6: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஒரு வாரமாக சேலத்தில் முகாமிட்டிருந்தார். அவர் நேற்றுமுன்தினம் சென்னை செல்வதாக இருந்தது. இதற்கிடையில் அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் கொலை செய்யப்பட்டார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியை ரத்து செய்தார். இதையடுத்து நேற்று காலை கார் மூலம் அவர் கோவை புறப்பட்டு சென்றார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி