எடப்பாடி பழனிசாமிக்கே முழு ஆதரவு: அதிமுக இளைஞரணி செயலாளர் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கீழ் ஒற்றை தலைமை அமைக்க அதிமுக இளைஞர் அணி அதரவு தெரிவித்துள்ளது. அதிமுக இளைஞர் அணி செயலாளர் சிவபதி மற்றும் நிர்வாகிகள் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பின்னர், சிவபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தோம். ஒற்றைத்தலைமை வேண்டும் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தோம். ஒற்றைத்தலைமைக்கு ஓபிஎஸ் ஒத்துப்போக வேண்டும். அதுதான் அவருக்கு நல்லது. 4 ஆண்டுகள் ஆட்சியை எடப்பாடி சிறப்பாக வழிநடத்தினார். கொரோனா மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்டார். இளைஞர்களின் நாயகனாக திகழ்கிறார்.  இளைஞரணி, இளம்பெண்கள் பாசறை ஆகியவற்றின் ஆதரவு 100 சதவீதம் எடப்பாடிக்கே. எடப்பாடி தலைமையில் ஒற்றைத்தலைமை வர வேண்டும். ஒற்றை தலைமை குறித்து எடப்பாடியிடம் தெரிவித்தோம். அவர் அதுகுறித்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் பொறுப்பை மீண்டும் கொண்டுவருவது ஜெயலலிதாவிற்கு செய்யக்கூடிய துரோகம் என்று ஓபிஎஸ் சொல்வது அவரது கருத்து. எடப்பாடி தலைமையில் அதிமுக வர வேண்டும் என்பதே எங்களது எண்ணம்.இவ்வாறு கூறினார். இன்று தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து ஒற்றை தலைமை வேண்டும், அதை அவரே வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்து வலியுறுத்தி கூறியிருக்கிறோம். தேனி மாவட்டத்தில் அதிகமான நிர்வாகிகள் எடப்பாடிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைமை பொறுப்பை எடப்பாடிக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். மூத்த தலைவர்களும் சமரச பேச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு கூறினார். …

Related posts

குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு