ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் பொறுப்பேற்பு

திண்டுக்கல், பிப். 9: திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த நாகராஜன் பதவி உயர்வு பெற்று நேற்று திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநராக பதவி ஏற்று கொண்டார். இவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை