ஊட்டி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஊட்டி வந்தார். ஊட்டியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர் நாளை சென்னை திரும்புகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று கலைவாணர் அரங்கில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக மாலை 6 மணியளவில் ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இன்று ஊட்டியில் தங்கும் அவர் நாளை மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்….