உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பழநி, ஜூலை 13: பழநி தாலுகா அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், தூய்மை பணியை தனியார்மயமாக்கக் கூடாது. தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது. குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பேரூராட்சியில் பணிபுரியும் சுயஉதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ேகாஷங்கள் எழுப்பினர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்