உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம்

 

பழநி, ஜூன் 25: உளுந்து பயிரில் 25% வரை கூடுதல் மகசூல் பெற 2% டிஏபி கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமான தொழில்நுட்பமாகும். 1 ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டிஏபி உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊறவைத்து நன்கு கலக்கிவிட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டு எடுத்துக் கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை நேரங்களில் கைத்தெளிப்பான் கொண்டு 1 ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.

35வது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும். மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது டிஏபி கரைசல் தெளிப்பது சிறந்ததாகும். இதனால் 1 ஏக்கரில் 25% முதல் 30% வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே, உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிஏபி கரைசல் தெளித்து பயன்பெற வேண்டுமென வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்