சேலம், ஆக.30: சேலம் கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக மக்கள் தொகை தினம் குறித்த கருத்தரங்கு சன்னியாசி குண்டு நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மாலதி வரவேற்றார். கன்னங்குறிச்சி மருத்துவ அலுவலர் விஜயகுமாரி கலந்து கொண்டு, பேசினார். மக்கள் தொகை தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வட்டார சுகாதார புள்ளியிலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுகாதார செவிலியர் தவமணி செய்திருந்தார்.