உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி 46 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருள்

திருவள்ளூர், ஆக. 9: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக உலக தாய்ப்பால் வாரம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு செயலாளர் கோபி அனைவரையும் வரவேற்றார். சுகாதார இயக்குனர் திலீபன் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் சக்சஸ் கார்த்திகேயன் தலைமை தாங்கி 46 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார். இதில் சங்கப் பணி முகிலன், போலியோ சேர்மன் எம்.ஆர்.எப்.பழனி, நேச்சுரல் அண்ணாமலை, அனந்தகிருஷ்ணன், மெய்ஞானசுந்தரம் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி