உப்புக்கோட்டையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி: பெரியாற்றில் நடந்தது

 

தேனி, அக். 14: தேனி அருகே உப்புக்கோட்டையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இயற்கை பேரிடர் குறைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இத்தினத்தையொட்டி தேனி அருகே உப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயில் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் போடி தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

ஒத்திகையின்போது, மரக்கட்டை, காலி காஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் கேன்கள், லைப்ஜாக்கெட் ஆகியவை மூலம் வெள்ளக்காலங்களில் நீச்சலடித்து தப்பிப்பது குறித்து தத்ரூபமாக தீயணைப்பு படை வீரர்கள் ஒத்திகை செய்து காண்பித்தனர். இதனை உப்புக்கோட்டை பச்சையப்பா பள்ளி மாணவர்கள் நேரில் கண்டு பயிற்சி பெற்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்