உத்தரபிரதேச சாமியார் உருவப்படத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம்

தோகைமலை. செப் 7: கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் கடவூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உருவப்படத்தை கிழித்து எறியும் போராட்டம் நடைபெற்றது. தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கடவூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். கடவூர் ஒன்றிய தலைவர் முருகானந்தம், மாவட்ட நிதி செயலாளர் சுப்பிரமணி, கரூர் மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பாரதி கலந்து கொண்டு பேசினார்.
இதில் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சாமியார் பரமஹம்சை, உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ேமலும் சாமியாரின் உருவ படத்தை கிழித்தெரிந்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் கடவூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்