உதயநிதி குறித்து அவதூறாக பேசிய உபி சாமியார் மீது போலீசில் புகார்

களக்காடு,செப்.8: சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசிய உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வகருணாநிதி களக்காடு போலீசில் புகார் அளித்தார். அவருடன் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், நகரச் செயலாளர் மணி சூரியன், நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், யூனியன் துணைத் தலைவர் விசுவாசம், கருப்பசாமி பாண்டியன், சங்கரி,தேவநல்லூர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், செல்லையா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை