ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காரில் கடத்தப்பட்ட 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய அர்ஜுனன் என்பவரை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் கைது செய்தது. வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக அர்ஜுனன், ரேஷன் அரிசியை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது….