ஈரோடு,செப்.10: ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே மேட்டூர் சாலையில் கடந்த 27ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.ஆனால், இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.