ஈரோடு, டிச.21: ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி.யின் நேரடி கட்டுப்பாட்டில் தனிப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பணியிடம் 6 மாதமாக காலியாக இருந்தது. இந்த பணியிடத்திற்கு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜபிரபு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ராஜபிரபு நேற்று காலை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, அவர் ஈரோடு எஸ்பி ஜவகரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.