ஈரோடு கிழக்கு தொகுதி ஓபிஎஸ் அணி வேட்பாளர் இபிஎஸ் அணியில் சேர்ந்தார்: கட்சியில் இருந்து நீக்கினார் ஓபிஎஸ்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால், கழக அமைப்பு செயலாளர் பி.செந்தில்முருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது செந்தில்முருகன், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவரை வாபஸ் பெறுமாறு ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளராக செந்தில்முருகன் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில் கட்சியில் இருந்து அவரை நீக்கி ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்துள்ளார்.  செந்தில்முருகன் எடப்பாடி முன்னிலையில் நேற்று அவரது அணியில் சேர்ந்தார். …

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்