இளையவேந்தர் பேரவை ஆலோசனைக் கூட்டம்

 

சேலம், மே 4: சேலத்தில் நடக்கும் மாநில மாநாடு தொடர்பாக, இளையவேந்தர் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர், மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஜெயசூர்யா, மகளிரணி சுமதி உள்பட நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் சந்தோஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் வரும் ஜூன் மாதம், சேலத்தில் இளையவேந்தர் பேரவையின் மாநில மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், இளையவேந்தர் பேரவையின் நிறுவனர் ரவிபச்சமுத்து, மாநில தலைவர் ஆனந்தமுருகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு இளைஞரணி மாவட்ட தலைவர் சந்துரு நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை