திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர், இஸ்லாமிய அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள், மீனவர்கள், கல்லூரி மாணவ மாணவியர், தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, 20வது வார்டுக்குட்பட்ட என்.எஸ்.கே நகர் ஜெயின் கோயில் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, அங்குள்ள மசூதியிலும், மணலி மற்றும் சின்னசேக்காடு பகுதியில் கிராம நல சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, கே.பி.சங்கர் பேசுகையில், ‘ஜாதி, மதம் என எந்த பாகுபாடும் இன்றி இந்த தொகுதியில் உள்ள அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளேன். கல்வியை தொடர முடியாதவர்களுக்கும், மருத்துவ வசதி செய்துகொள்ள முடியாதவர்களுக்கு உதவியும் செய்துள்ளேன். தொடர்ந்து செய்வேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த தொகுதியில் பல புதிய திட்டங்களை கொண்டு வருவேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவேன். எனவே, உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். நிர்வாகிகள் நாகலிங்கம், ஏ.வி.ஆறுமுகம், முத்துசாமி, கோபி, ஸ்டாலின், ரவி கரிகால் சோழன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீர்த்தி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்….