இளம் பெண் மாயம்

 

திருச்சுழி, ஜூலை 21: திருச்சுழி அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் நர்சிங் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் ஊர் திருவிழாவிற்காக வந்த இளம்பெண் போனில் அடிக்கடி பேசுவதை கண்டு அவரது தந்தை கண்டித்துள்ளார். மேலும் செல்போனை பறித்து கொண்டார். இதனால் வேதனையை அடைந்த இளம்பெண் யாரிடமும் கூறாமல் மாயமானார். இது குறித்து பரளச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை