இளம்பெண் மாயம்

தேன்கனிக்கோட்டை, ஆக.30: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மரியப்பா(55), கூலி தொழிலாளி. இவரது மகள் கௌசல்யா(19) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27ம்தேதி வேலை முடிந்து கெளசல்யா வீட்டிற்கு வராததால் மரியப்பா பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காதால் தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்