இலவச கண் சிகிச்சை முகாம்

சத்தியமங்கலம், ஜூலை 7: பவானிசாகர் யங்மைன்ட்ஸ் சங்கம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் பவானிசாகர் நகர் பகுதியில் உள்ள குருனாப்பூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முகாமினை சங்க தலைவர் சங்கர் தொடங்கி வைத்தார். அரசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பொதுமக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக ஈரோடு அழைத்து செல்லப்பட்டனர். இந்த முகாமில் ஆலோசகர் மூர்த்தி, செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

கோ-ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை ரூ.1.78 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

வங்கதேசத்தினர் ஊடுருவல்: தனிப்படை அமைத்து விசாரணை