இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்

 

காஞ்சிபுரம் ஜூலை 29: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 9ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தனியார் இயக்கம், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாமினை நேற்று திருவனைக்கோயில் நடத்தின.

இந்த, இலவச கண் அறுவை சிகிச்சை முகாமில் திருவனைக்கோயில், முளங்கினிமேனி கிராமத்தை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தனி பேருந்துகள் மூலம் சென்னை சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக, அங்கு வைக்கப்பட்திருந்த அப்துல் கலாம் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், மரக்கன்றுகளை நட்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி