இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த பிப்.7ம் தேதி பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை செய்த நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை