திருச்சி: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 318 கிராம் தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையிலிருந்து புறப்பட்டு நேற்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தடைந்தது. அப்போது அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் ஹேன்ட் பேக்கில் மறைத்து எடுத்து வந்த 318 கிராம் எடையுள்ள தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.19.12 லட்சம் இருக்கும். இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.