இறைச்சிக்காக கடத்தப்பட்டதா?: அசாமில் சாக்கு மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட தெரு நாய்களை மீட்டது போலீஸ்..!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த தெரு நாய்களை போலீசார் மீட்டனர். கோலக்காட் மாவட்டம் போகாங்கட் பகுதியில் சாலையில் சாக்கு மூட்டைகளில் 31 நாய்கள் கட்டப்பட்டு கேட்பாரற்று கிடந்தன. இதனை பார்த்த உள்ளூர் வாசிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், போலீசார் சென்று பார்த்தபோது அங்கு மூட்டைகளில் கட்டப்பட்டு நாய்கள் கிடந்தன. இதனையடுத்து விலங்கின ஆர்வலர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் நாய்களை மீட்டு உணவு அளித்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் வாகனம் பழுது அடைந்ததால் நாய்களை சிலர் சாலையில் வீசிவிட்டு சென்றதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இறைச்சிக்காக நாய்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்களை கடத்திய மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. …

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு