செய்முறை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மசாலா பையை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின் பிரியாணி இலை, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை சேர்க்கவும். பின் 10 நிமிடம் வேக வைக்கவும். அரிசி வெந்தவுடன் மசாலா பையை எடுத்து விடவும். ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த இறாலை சமமாகப் போடவும். அதன்மேல் வேக வைத்த அரிசி, மற்றும் Fried onion, கொத்தமல்லி, புதினா சேர்த்து அதன்மேல் மீதியுள்ள அரிசியை சேர்த்து; பாலில் கலந்து வைத்த குங்குமப் பூவையும் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால் இறால் பிரியாணி தயார். இதனுடன் தயிர் மற்றும் இறால் சில்லி சேர்த்து பரிமாறவும்.
இறால் பிரியாணி
previous post