கிருஷ்ணகிரி, நவ.21: கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சுதாகர், லாரி டிரைவர். இவர் பெரியமுத்தூர் பகுதியில் உள்ள கோயில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு போதையில் இருந்த நரசிம்மன் (20), பனந்தோப்பு (25), நவீன்குமார் (25) ஆகியோர் சுதாகரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, அவரை அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி அவர் டேம் போலீசில் அளித்த புகாரின் பேரில் நரசிம்மன், நவீன்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் தன்னையும் தனது நண்பரையும் சுதாகர் தரப்பினர் தாக்கியதாக நவீன்குமார் கொடுத்த வழக்கில், னிகுமார், கீர்த்தி(31), தர்மலிங்கம்(40), சுதாகர்(37) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.