இரணியல் சுற்றுவட்டார பகுதியில் போதையில் பைக் ஓட்டிய 11 பேர் மீது வழக்கு

திங்கள்சந்தை, ஜூன் 12: இரணியல் சப். இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில், சிறப்பு சப். இன்ஸ்பெக்டர்கள் குமார், தனிஸ்லாஸ் உள்ளிட்ட போலீசார் இரணியல் காவல் நிலைய திங்கள்சந்தை, இரணியல், ஆழ்வார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது போதையில் தனித்தனியாக பைக்குகளில் வந்த மெர்லின் (40), ஜாபர் அலி (42), ஷின்றோ (35), ஜஸ்டின் (38), மகேஷ் குமார் (37), செல்வின் டேவிட் (28), ராஜேஷ் குமார் (36), சகாய ஸ்டார்வின் (35), சந்தோஷ் குமார் (42), ராஜன் (34), செல்வகுமார் (42) ஆகிய 11 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்