இரணியலில் போதையில் பைக் ஓட்டிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

திங்கள்சந்தை, ஜூன் 19: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் திங்கள்நகர், இரணியல் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மது போதையில் தனித்தனியாக பைக்குகளில் வந்த நாகராஜன்(48), பிரவீன் குமார்(37), சுபின்(36), மைக்கேல் வசந்த்(35) ஆகிய 4 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் மது போதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து மது போதையில் பைக் ஓட்டிய 4 பேர் மீதும் இரணியல் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை