சிம்லா: இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா உட்பட 5 மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 40 பேர் பலியாகி உள்ளனர். காணாமல் போன பலர் தேடப்பட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் பல இடங்களில் நேற்று முன்தினம் வேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை கொட்டியது. இதனால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அடித்து செல்லப்பட்டனர். நிலச்சரிவுகளில் வாகனங்கள், வீடுகள் சிக்கின. இதில், இமாச்சல பிரதேசத்தில் மட்டுமே 22 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். உத்தரகாண்டிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இங்கு 5 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயினர். இந்நிலையில், இமாச்சல் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 40 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது….